தெருநாய் கடியால் 5 மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

சென்னை மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லக்கூடியவர்களை நாய்கள் கடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெரு நாய் கடியால் 5 மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை கூட விளையாட அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version