பலத்த மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வடகிழக்குப் பருவமழை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

பலத்த மழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியோடு சேர்த்து கல்லூரிகளுக்கும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .

Exit mobile version