வட மாநிலங்களில் பெய்யும் கனமழையால் 86 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளா, கர்நாடக மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளதால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை, முற்றிலும் பாதிகப்பட்டுள்ளது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் இதுவரை 86 பேர்  உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 39 பேர் பலியாகினர்.  இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்கிறார். 

Exit mobile version