தமிழகத்தில் புதிய 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Exit mobile version