இரட்டையர் பூப்பந்து போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகை

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற தொடக்க நிலை இரட்டையர்கள் பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் உள் விளையாட்டு அரங்கில் இரட்டையர் பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சென்னை உள்பட 60 அணிகளிலுருந்து 120 பேர் கலந்து கொண்டனர். மேலும் 5 சுற்றுகள் நடைபெற்ற இதில் முதல் நான்கு இடங்களில் தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. முதல் பரிசை 21:14 என்ற கணக்கில் கணேஷ், சந்திரமௌலி வெற்றிக் கோப்பையை தட்டிசென்றனர்.

Exit mobile version