24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் துபாய் ஷாப்பிங் திருவிழா கொண்டாட்டம்

துபாயில் உலகப் புகழ் பெற்ற ஷாப்பிங் திருவிழா தொடங்கியுள்ளது. 24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை 39 நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவில், ஷாப்பிங் செய்பவர்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுமார் 3200 கடைகளில் 700 வகையான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

துபாய் ஷாப்பிங் திருவிழாவின் போது பொதுமக்களை மிகவும் கவர்ந்த வான வேடிக்கை நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு துபாய் கிரீக், துபாய் திருவிழா சிட்டி உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெறுகிறது.

மேலும், இந்த திருவிழாவில், உலகின் ஏழு அதிசயங்களின் மாடல்களும் சுற்றுலா பயணிகளின் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அமீரகத்தின் பழங்கால உணவு முறைகளும் சமைத்து விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

Exit mobile version