முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் துபாய் தொழில் முதலீட்டாளர்கள் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய் நகரங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது துபாயில் நடைபெற்ற தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துபாய் நாட்டின் தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், சென்னை வந்துள்ள துபாயைச் சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Exit mobile version