பணத்த எடுக்குறியா! பட்டுன்னு போடவா? பட்டாக்கத்தியுடன் போதை ஆசாமி…

திண்டுக்கல்லில் வர்த்தக நிறுவனத்தில் பட்டாக்கத்தியுடன் வந்து பணம் கேட்டு மிரட்டிய போதை நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி பழனி சாலையில் உள்ள வசந்த் அன்ட் கோ நிறுவனத்திற்குள் போதையுடன் வந்த இளைஞர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் பணம் தர மறுத்த நிலையில் கம்ப்யூட்டர் மானிட்டர் மீது கத்தியால் வெட்டி விட்டு, அவர் வெளியேறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் வெளியே வந்த அந்த நபர், சாலையில் கத்தியைக் காட்டி ரகளையில் ஈடுபட்டதுடன் பழ வியாபாரி ஒருவரை தலையில் வெட்டி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த நபர், போதை ஆசாமியை அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரகளையில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version