இராணுவ வீரரின் போதைக்கு side dish போலீஸின் மூக்கு !

மதுரை வாடிப்பட்டி அருகே மது போதையில் காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரரை, போலீஸார் கைது செய்தனர்.

கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த இவர், மது அருந்தி விட்டு, அண்டை வீட்டாருடன் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், நிதானம் தவறிய நவநீதகிருஷ்ணனை சமாதானப் படுத்த முயன்றுள்ளனர்.

ஆனால் போதை தலைக்கேறிய அவர், எதிரில் நின்றிருந்த காவலரின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.

வலியால் துடிதுடித்து போன அந்த காவலரை, சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்து, நவநீத கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Exit mobile version