10 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் சிகரெட் கேட்டு, பெட்டி கடையை துவம்சம் செய்த மதுப்பிரியரின் அட்டகாசம்!

வாரத்துக்கு ஒரு நாள் குடிச்சுட்டுருந்த மதுப்பிரியர்கள், திமுக அரசு ஆட்சிக்கு வந்ததுல இருந்து தினமும் குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.அதே மாதிரி, உச்ச கட்ட போதைல இருக்கப்ப செவனேன்னு போயிட்ருக்க பொதுமக்கள தொந்தரவு பண்றத மதுப்பிரியர்கள் இப்பல்லாம் ஒரு ட்ரெண்டாவே பாலோவ் பண்றாங்க.

தேனி மாவட்டம் எண்டபுளி ஊராட்சியில செம்மன்குழி கக்கன்ஜி காலனி இருக்கு. இந்த பகுதிய சேர்ந்தவர்தான் ஏரியா ரவுடி வாஞ்சிநாதன்.அந்த பகுதில இருக்க மக்களை உருட்டி மெரட்டி வச்சுருக்காப்ள. சம்பவத்தன்னைக்கு போதைல இருந்த வாஞ்சிநாதன், வீட்டுக்கு முன்னாடி இருந்த பெட்டிகடைக்கு போயி 10 ரூவா கொடுக்குறேன் ஒரு பாக்கெட் சிகரெட் குடுன்னு கேட்ருக்காரு.

ஏம்ப்பா 10 ரூவாய குடுத்துட்டு ஒரு பாக்கெட் சிகரெட் கேட்கறயே உனக்கே இது நியாயமாப்பான்னு கடைக்காரர் கேட்க, ஏரியா ரவுடி வாஞ்சிக்கு கோவம் வந்துருச்சு. என்னயே எதுத்து பேசுவியா நீ, நான் யார்னு தெரியுமான்னு சொல்லிட்டு, சட்டையின் கைப்பகுதியை சுருட்டி அங்க இருந்த ஒரு அக்காகிட்ட தன்னோட புஜ பலத்தை காட்டிருக்காரு.

பயந்துபோன கடைக்காரர், ஆள் வர நேரம் பிரச்னை பண்ணாம நகருப்பா, வியாபாரம் பண்ணனும்-னு சொல்ல, உடனே ஏரியா ரவுடி வாஞ்சி அங்கிருந்த பிளாஸ்டிக் டப்பாவ எடுத்து கடைக்கரார அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. இந்த கைகலப்புல பெட்டி கடைக்காரருக்கு அடி கொஞ்சம் பலம். உடனே போலீஸ் கேசாகி தலைமறைவா இருந்த வாஞ்சி நாதன் இப்ப ஜெயில்ல இருக்காரு. கட்டுக்கடங்காம போயிட்ருக்க மதுப்பிரியர்களின் தொந்தரவுகளுக்கு விடியா ஆட்சி முடிவு கட்டுமா?

Exit mobile version