ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் குறித்து டிரம்ஸ் சிவமணி உருக்கம்

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றிய அனைவரையும், அவரது தாயார் பெற்ற பிள்ளைகளைப் போல பார்த்துக்கொண்டதாக, டிரம்ஸ் சிவமணி தெரிவித்துள்ளார்.

இசைப்புயல் என சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் ஐயர்கண்டிகை கிராமத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பண்ணைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், இசையமைப்பாளர்கள் ஜீ.வி.பிரகாஷ், தாஜ்நூர், பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ஸ் சிவமணி, ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் தங்களையும் அவரது குழந்தைகள் போல பார்த்துக்கொண்டதாக உருக்கமாக தெரிவித்தார்.

Exit mobile version