ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட போதை பொருள் பறிமுதல்

சென்னை மாதவரத்தில், ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், கேரளாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

ஆந்திராவிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா  சென்னைக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல் துறையினர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு சென்னை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே மாதவரம் பேருந்து நிலையத்தில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அஸார் என்பவரிடம் நடத்திய சோதனையின் போது, அவரிடம் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அஸாரை கைது செய்தனர்.

Exit mobile version