திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிற்கு கடத்த முயன்ற 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையைச் சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் இருமல் மருந்து போன்ற வடிவில் இருந்த போதைப் பொருட்கள் சிக்கின. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபரை, போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.