கடை மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமிகள்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகரின் பாதுகாவலரையும், கடை மேலாளரையும் கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கார்த்திக் என்பவர், முட்டை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 21-ம் தேதி இரவு அவரது கடைக்குள் நுழைந்த 2 பேர் கல்லாப்பேட்டியை உடைக்க முயற்சி செய்தனர். அப்போது சத்தம் கேட்டு கடையின் மேலாளர் சுரேஷ் வெளியே வர, அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், கத்தியால் ஆங்காங்கே வெட்டிவிட்டு 2 பேரும் தப்பியோடினர்.

முட்டை கடையில் இருந்த மேலாளர் சுரேஷை வெட்டிய பின்பு, மது போதையில் அதே பகுதியில் சுற்றி திரிந்த அவர்கள், பா.ஜ.க எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில தலைவர் பாலசந்திரனின் பாதுகாவலராக பணியாற்றி வரும் காவலர் வீரபுத்திரனை வழி மறித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து காவலர் வீரபத்திரன் அளித்த புகாரின் பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பிரதீப் மற்றும் அவரது கூட்டாளி தினேஷ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து முதலில் தினேஷை கைது செய்த போலீசார், பின்னர் பிரதீப்பையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலைமுயற்சி, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு காவல்நிலையம் அழைத்து வந்தனர். அப்போது பாத்ரூம் சென்ற பிரதீப் கால் வழக்கி கீழே விழுந்ததில் வலது கை, இடது கால் முறிந்தது. அவருக்கு முறையாக சிகிச்சை அளித்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version