சேத்தியாத்தோப்பு குடிநீர் பிரச்னை: உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

சேத்தியாத்தோப்பு அருகே குடிநீர் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடப்பாக்கத்தில் ரைஸ்மில் தெரு அருகே பொதுகுடிநீர் ஆழ்துளைக்கிணறு பழுது ஏற்பட்டது. இதனால் 15 நாட்களுக்கும் மேலாக கிராம மக்கள் நீருக்கு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் அப்பகுதியினர், குடிநீர் பிரச்னையை சரிசெய்ய கோரிக்கை வைத்தனர். பின், ஆழ்துளைக் கிணறு பழுதுபார்க்கும் பணிகளை அரசு பணியாளர்கள் செய்தனர். தங்களின் கோரிக்கைகளை ஏற்று குடிநீருக்கான பிரச்னையை சரிசெய்யும் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் வடப்பாக்கம் கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version