"பொள்ளாச்சியில் குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை"

பொள்ளாச்சியில் ஏற்கனவே மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், நகரில் புதிதாக உருவாகியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை என்று பொள்ளாச்சி தொகுதி அதிமுக உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், கடந்த ஆட்சியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை இந்தாண்டே செயல்படுத்த நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

Exit mobile version