கஜா புயல் பாதித்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டது : தமிழக அரசு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு, தமிழக அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், கஜா புயல் பாதித்த பகுதிகளில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மின் பணியாளர்களின் உதவியோடு தமிழக மின்சார வாரியம் முழு வீச்சில் செயலாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மின்வினியோகம் முழுவதுமாக சீரடையும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரம் குடிநீர் வினியோகம் 100 சதவீதம் சீர் செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version