குடிநீர் பற்றாக்குறை குறித்த கிரண்பேடி கருத்துக்கு பா. வளர்மதி கண்டனம்

சென்னையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த கருத்துக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் பா. வளர்மதி கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அதிமுக இலக்கிய அணிச் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா என்று கேள்வி எழுப்பியதோடு, தென்னிந்தியா முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், உண்மையை உணராமல் ஏனோதானோ என கிரண் பேடி கருத்து கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் சேரவேண்டிய உரிய பங்கினைப் பெற்றுதர பாடுபட வேண்டிய நேரத்தில், பொறுப்பை தட்டிக்கழிக்காமல் கிரண்பேடி கண்ணியம் காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

Exit mobile version