விருதுநகரில் ஓவிய வரைபட கண்காட்சி

விருதுநகரை சேர்ந்த இளவரசி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவிய கலையை பயிற்றுவித்து வருகிறார்.

இவரிடம் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் ஓவியக்கலையை கற்று பயன்பெற்றுள்ளனர். அவர்கள் வரைந்த தஞ்சாவூர் ஓவியம், கேரள ஓவியம், மார்பிள் க்ளே ஓவியம், பளிங்குத்தூள் ஓவியம், கான்கிரீட் ஓவியம், தங்க்கா ஓவியம், ஆயில் ஓவியம், நீர்கலர் ஓவியம் என 20க்கும் மேற்பட்ட ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர்.

இந்த ஓவியங்களை ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பார்வையிட்டனர். கடந்த 4 நாட்களாக நடந்த ஓவியக்கண்காட்சியில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓவியங்கள் பல வகையான ஓவியங்களை கலை பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

Exit mobile version