மலர் சந்தைக்கு புகழ்பெற்ற தோவாளையில் மலர் அலங்காரப்போட்டி

மலர் சந்தைக்கு புகழ்பெற்ற தோவாளையில் நடத்தப்பட்ட மலர் அலங்காரப்போட்டி காண்போரை வெகுவாக ஈர்த்தது.

புகழ்பெற்ற மலர்ச்சந்தையான குமரி, தோவாளையில் நடைபெற்ற முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் மலர் அலங்காரப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், பூ விற்பனையாளர்கள் மற்றும் பூ கட்டும்
கலைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் தேர் மாலை, தோரண மாலை என 20 ஆயிரம் கிலோ எடை கொண்ட, பூக்கள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டது. நெல்லை, குமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Exit mobile version