வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

மேலூர் அருகே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் போட்டியில் 49 ஜோடி காளைகள் பங்கேற்றன…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தான்பட்டியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. 3 பிரிவாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாட்டு வண்டிப் பிரிவில் 16 ஜோடி காளைகளும், சிறிய மாட்டுவண்டிப் பிரிவில் 33 ஜோடி காளைகளும் பங்கேற்றன. கோட்டநத்தான்பட்டியில் தொடங்கி இடையமேலூர் வரை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்த மாட்டு வண்டிப் போட்டியைப் பொதுமக்கள் அனைவரும் சாலையின் இருபுறங்களிலும் நின்று பார்த்து மகிழ்ந்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version