தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் – அமைச்சர் துரைக்கண்ணு உறுதி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக செயல்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் ஊக்குவிப்பு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, சிறு குறு தொழிலாளர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். இதற்காக தொடங்கப்பட்டுள்ள இயக்கம் வாயிலாக கடன் உதவி, சந்தைபடுத்துதல் உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தொழிலை ஊக்குவிக்க நடுத்தர மக்களுக்கு தமிழக அரசு என்றும் துணையாக இருக்கும் என குறிப்பிட்ட அமைச்சர் துரைக்கண்ணு, இதற்காக பல்வேறு திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

Exit mobile version