கொரோனா பாதிப்பில் இருந்து பலர் குணமடைந்துள்ளதால் அச்சம் வேண்டாம்!

மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்படதேவையில்லையென வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் காப்பாற்றப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என கூறினார். கொரோனாவை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version