நோய்வாய்ப்பட்டவர் சந்திப்பை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த வேண்டாம் ராகுல் – மனோகர் பாரிக்கர்

ராகுல் காந்தியுடனான சந்திப்பில் ரஃபேல் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நோய்வாய்ப்பட்ட தன்னை சந்திக்கவே ராகுல் காந்தி வந்ததாகவே, அவருடனான 5 நிமிட சந்திப்பில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்றும் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பை அரசியல் லாபத்திற்காக ராகுல் பயன்படுத்தியது வேதனையை தருவதாக கூறியுள்ள பாரிக்கர், உடல் நலம் தேர வாழ்த்து தெரிவிக்கவே ராகுல் வந்ததாக தாம் நினைத்தாகவும், ஆனால் அவரது நோக்கம் வேறு விதமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நோய்வாய்ப்பட்டவருடனான சந்திப்பை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மனோகர் பாரிக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version