வாடகை நிலுவைத் தொகை காரணமாக பள்ளியை மூட கூடாது -மாணவர்கள் போராட்டம்

வாடகை நிலுவைத் தொகை காரணமாக பள்ளியை மூட கூடாது என பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 32 கிரவுண்டு இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. குத்தகை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வாடகை நிலுவைத் தொகை பதிமூன்று கோடி ரூபாயை பள்ளி நிர்வாகம் கோவில் நிர்வாகத்திற்கு வழங்கவில்லை கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளியை காலி செய்யும்படி கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சுமார் ஆயிரத்து 500 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்குவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இதனால் அச்சமடைந்த மாணவர்களும், பெற்றோரும் பள்ளியை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version