பணியிலிருந்த டாஸ்மாக் காவலாளி கழுத்து நெறித்து கொலை

திருச்சி அருகே டாஸ்மாக் காவலரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லால்குடியை அடுத்த, பூவாளூரில் உள்ள டாஸ்மாக் கடையில் காவலாளியாக பாலையா என்பவர் பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு காவல் பணியில் இருந்த பாலையா, மறுநாள் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து லால்குடி போலீசாருக்கு, அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாலையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலாளி பாலையாவை, கொலை செய்துவிட்டு டாஸ்மாக் கடையில் திருட முயற்சி நடந்ததா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.

Exit mobile version