ஜாக்டோ ஜியோவின் போராட்டத்துக்கு ஆதரவில்லை

ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என, அரசு பணியாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இந்தநிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம், மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் ஆகியவை அறிவித்துள்ளன.

தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்த இந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தனர்.

Exit mobile version