எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் கொரோனாத் தொற்று அதிகரிக்கிறது- கேரள பொதுமக்கள் குற்றச்சாட்டு

கேரளாவில் எதிர்க்கட்சியினர் நடத்திவரும் போராட்டத்தால், கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொது இடங்களில் அதிக அளவில் ஆட்கள் கூடக்கூடாது என ஏற்கனவே பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சமீபகாலமாக தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகக்கோரியும், நவம்பர் மாதம் நடைபெறும் பஞ்சாயத்துத் தேர்தலை முன்னிட்டும், எதிர்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஆளும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version