மூதாட்டி வயிற்றில் இருந்த நாலரை கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், 55 வயதுடைய மூதாட்டிக்கு, நாலரை கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு பல ஆண்டுகளாக வயிற்றில் வலி இருந்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனால், அதனை சரி செய்ய முடியாததால், மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் நாலரை கிலோ கட்டி இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். இதனையடுத்து, 17 நாட்களாக மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு, மூதாட்டிக்கு வயிற்றிலிருந்த நாலரை கிலோ புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, மூதாட்டி ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version