மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

பணியின் போது பாதுகாப்பு வழங்கக்கோரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குவங்கத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது பணியை புறக்கணித்து, ஜிப்மர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதிற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், தொடர்ந்து பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்
கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேரணியாக சென்ற மருத்துவர்கள் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனரிடம் உரிய பணிபாதுகாப்பு அளிக்க கோரி மனு அளித்தனர்.

Exit mobile version