புதுச்சேரியில் மருத்துவர் நியமனத்தில் முறைகேடு!

புதுச்சேரியில், சுகாதாரத்துறையில் மருத்துவர்கள் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அம்மாநில துணை சபாநாயகர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வழி மையங்களில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக துணை சபாநாயகர் பாலன் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை அவரது அலுவலகத்தில் சந்தித்து புகார் மனு அளித்தார். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சரிடம் புகார் அளித்திருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version