பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுடன் திமுக பிரமுகர் மகனுக்கு தொடர்பு?

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் மாதவன், இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், திருநாவுக்கரசு பிறந்தநாள் அன்று முகநூல் மூலம் மணிமாறன் என்பவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மணிமாறன், திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் என்பவரின் மகன் ஆவார். அதற்கு, “நன்றி மச்சான்” என்று திருநாவுக்கரசு பதில் மெசேஜ் அனுப்பி இருப்பதாகவும் அதற்கான புகைப்படத்தையும் காட்டினார்.

இதன் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிய வருவதாக வழக்கறிஞர் மாதவன் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டிய வழக்கில் கைதாகியுள்ள செந்தில், திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனின் திருமணத்தன்று அவருடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தையும் வழக்கறிஞர் மாதவன் வெளியிட்டார். இந்த வழக்கில் திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின், மகன் மணிமாறனையும் உட்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version