கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது-பள்ளிக்கல்வி துறை

கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்வுகள் முடிந்த பிறகும் ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு கோடை விடுமுறைகளில் வகுப்புகள் நடத்துவது வழக்கம். மாணவர்களின் மனதில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவே கோடை விடுமுறைகள் விடுக்கப்படுவதால் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தக் கூடாது என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் இது குறித்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version