கொரோனா தடுப்பூசி குறித்தான தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி குறித்தான தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசிடமிருந்து இதுவரை 55 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைக்கப் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

 

அவற்றில், 47 லட்சத்து 5 ஆயிரம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சர், தற்போது 8 லட்சத்து 80 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு கூடுதல் ரெமிடிசிவர் மருந்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்ட அமைச்சர், தடுப்பூசி குறித்தான தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

 

Exit mobile version