தேர்வுக்காக வாழ்க்கையை இழக்கக் கூடாது : பிரதமர் அறிவுரை

தேர்வு என்பது ஒரு வாய்ப்பு தான் என்றும் அதற்காக வாழ்க்கையை இழக்கக் கூடாது எனவும் மாணவ மாணவியருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர் தேர்வு என்பது நம்மை செம்மைபடுத்திக் கொள்ளவும், வளர்க்கவும் உதவும் என்றார். பள்ளித் தேர்வை சவால் நிறைந்ததாக கருத வேண்டாம், வாழ்க்கையே சவால் நிறைந்ததாக அமைய வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர், அவர்களை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறினார். மாணவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இலக்குகளை பெரிதாக நிர்ணயிப்பதுடன் அதில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

Exit mobile version