ஓட்டு கேட்டு வரவேண்டாம். பொதுமக்கள் அதிரடி!

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்கு சேகரிக்க செல்லும் திமுகவினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கே.என்.கே சாலையில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க சென்ற திமுகவினரை சூழ்ந்து கொண்ட அப்பகுதி மக்கள், கடந்த ஒரு வருடமாக இப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற கோரியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். மேலும் தங்களிடம் திமுகவினர் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் எனவும் கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version