மூளைக்காய்ச்சல் பரவுவதாக கூறி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரவலாக மூளைக்காய்ச்சல் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் சார்பாக கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 486 மருத்துவ முகாம்கள், 166 நடமாடும் மருத்துவ குழுக்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக கூறினார்.

இதுவரை கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 8 லட்சத்து 37ஆயிரம் நபர்கள் சிகிச்சை பெற்று இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், கஜா புயல் பாதிப்புக்கும் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதற்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிவித்தார்.

Exit mobile version