திமுகவின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி : சரத்குமார்

தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்த போது காவிரி பிரச்சினையை தீர்க்கவில்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின்
தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து சமத்துவ மக்கள்
கட்சியின் தலைவர் சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார். தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்த போது காவிரி பிரச்சினையை தீர்க்கவில்லை எனக்கூறிய அவர், லட்சகணக்கான ஈழதத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தும், அதற்கு ஒத்துழைத்தது என குற்றம் சாட்டினார்.

இந்தியாவிலேயே கல்விக்கு உதவி செய்தவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றும் அவர் வழியில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version