பெட்ரோல் நிலையத்தில் தி.மு.க.வினர் ரகளை

நாகையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டு ஊழியரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூரில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு, கீழ்வேளூர் திமுக ஒன்றிய சேர்மன் வாசுகி மற்றும் அவரது கணவரான திமுக துணை ஒன்றிய செயலாளர் நாகராஜன் ஆகியோர் காருக்கு டீசல் நிரப்ப சென்றுள்ளனர். அப்போது, திமுக துணை ஒன்றிய செயலாளர் நாகராஜனுக்கும், பெட்ரோல் நிலைய ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன் டீசல் நிரப்பிக் கொண்டிருந்த ஊழியர் ராஜபாண்டியனை  தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தி.மு.க. ஒன்றிய சேர்மனின் ஆதரவாளர்கள், பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்து ஊழியர் ராஜபாண்டியனை சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

Exit mobile version