மதுபோதையில் சாலையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட தி.மு.க.வினர்!

சென்னை கே.கே.நகரில் மதுபோதையில் திமுகவினர் சாலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், வாகனங்களை மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான முருகன் மற்றும் தவமணி இருவரும், மதுபோதையில் கே.கே.நகர் பகுதியில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். போதையில் தள்ளாடியபடி சாலையில் திரிந்த திமுக நிர்வாகிகள், வாகனங்களை மறித்ததுடன், தங்களது ஆடைகளை களைந்து அரை நிர்வாணத்துடன், ஆபாச வார்த்தைகளை பேசிய படி சாலையில் படுத்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருவரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முருகன், தவமணி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முகம் சுளிக்கும் வகையில் சாலையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட திமுக நிர்வாகிகளின் செயலால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Exit mobile version