வேட்பு மனு தாக்கலின் போது திமுக வினர் தேர்தல் விதிமீறல்

காஞ்சிபுரத்தில் திமுக வினர் வேட்பு மனு தாக்கலின் போது சாலை முழுவதும் வாகங்களை நிறுத்தியதில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவும் வேட்பு மனு தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனங்களை சாலையின் இருப்புறமும் நிறுத்தியதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Exit mobile version