வரும் மக்களவை தேர்தலிலும் திமுக தோல்வியடையும்

மு.க.அழகிரி மீதான அச்சத்தால் மதுரை நாடாளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்த்து விட்டதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் திமுகவின் தேர்தல் உத்திகளை வகுக்கும் தளபதியாக இருந்தவர் மு.க.அழகிரி. கருணாநிதியாலேயே பாராட்டப்பட்டவர், அவருக்காகவே கட்சியில் ‘தென் மண்டல அமைப்புச் செயலாளர்’ என்ற புதிய பதவி உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.

ஆனால், அழகிரி உடனான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் அவரைக் கட்சியில் இருந்து ஒதுக்கினார் திமுகவின் தலைவர் ஸ்டாலின். அழகிரியை ஒதுக்க முடிந்த அவரால் தென் மண்டலத்தில் தனது தலைமையை நிலை நிறுத்த முடியவில்லை. தென் மண்டலத்தில் உள்ள திமுகவினர் ஸ்டாலினின் தலைமையை இன்னும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த முறை போன்றே வரும் மக்களவை தேர்தலிலும் திமுக தோல்வியடையும் என்று, மு.க அழகிரி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version