வேளாண் மண்டல தீர்மானத்தை புறக்கணித்து திமுக வெளிநடப்பில் ஈடுபட்டது: துணை முதல்வர்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மசோதா நிறைவேற்றத்தின் போது வெளிநடப்பு செய்ததன் மூலம் திமுக மக்கள் விரோத கட்சி என்பதை அவர்களே வெளிப்படுத்தி விட்டதாக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு தான் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version