சீர்காழியில் வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் திமுகவினர் வன்முறை

நாகை மாவட்டம் சீர்காழியில் வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் மகளிர் கல்லூரியில், திமுகவினர் கல் வீசி வன்முறையில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியங்கங்களில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்கு அளித்துள்ளனர். 192 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான தனியார் மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரிக்கு வந்த திமுகவினர், வாக்குபெட்டிகளுக்கு சீல் வைக்கும் போது தங்களை அழைக்கவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, கல்லூரி மீது கற்களை வீசி திமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Exit mobile version