தூத்துக்குடியில் கனிமொழி பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடியில், திமுக வேட்பாளர் கனிமொழி விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வரும் திமுகவால், பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுகவின் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, வாக்குசேகரிப்பில் தேர்தல் விதிகளை மீறி முக்கிய இடங்களில் வாகனத்தை நிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பணிக்கு சென்று வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Exit mobile version