மக்களவைத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக

திமுக அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி கடந்த மூன்று மாதங்களில் 35 லட்சம் பேர் கடனாளியாக மாறிவிட்டதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சார்பில் ஆரணி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், மக்களவைத் தேர்தலின் போது திமுக கடன் தள்ளுபடி குறித்து பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாகவும் இதன்மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 35 லட்சம் பேர் கடனாளிகளாக மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version