உதயநிதிக்காக காத்திருந்த எம்.எல்.ஏக்கள் – திமுகவினரால் தொற்று பரவும் அபாயம்!

சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமல், உதயநிதி ஸ்டாலினுக்காக எம்.எல்.ஏக்கள் காத்திருந்ததால், தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்த நிலையில், அதன்பின்னர் அமைச்சர்கள் வருகை தந்தனர். அப்போதும் கூட்டம் தொடங்காமல் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்காக அனைவரும் காத்திருந்தனர்.

இறுதியாக வந்த உதயநிதியை அமைச்சர்கள் வரவேற்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அதிகாரிகள் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடித்து அமர்ந்திருந்த நிலையில், உதயநிதியை வரவேற்பதற்காக கூட்டம் கூடிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு இடைவெளியை காற்றில் பறக்கவிட்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Exit mobile version