மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட வேண்டாம் : அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர்கள் கழகத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேம்போக்கான குற்றச்சாட்டுக்களை திமுக கூறி வருவதாக தெரிவித்தார். மக்களை தவறாக திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

Exit mobile version