காங்கிரஸ் போஸ்டரால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுகவினர்

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் தரப்பு ஒட்டியுள்ள போஸ்டர், அங்கு போட்டியிட எண்ணியிருக்கும் கூட்டணி கட்சியான திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, கூட்டணிக்குள் இருக்கும் குழப்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாண்டி என்கிற மலேசியா பாண்டியன். 2021 தேர்தலில் மீண்டும் முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸே போட்டியிடும் என்று கூறி வாக்கு கேட்டு, இவர் போஸ்டர் ஒட்டியுள்ளார். ஆனால், திமுகதான் இங்கு போட்டியிடும் என்ற ஆசையில் பணியாற்றிவரும் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் உள்ளிட்ட திமுகவினர், இந்த போஸ்டரால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடபெறும் முன்பே காங்கிரஸ் போஸ்டர் ஒட்டியுள்ள செயல், திமுகவின் கனவுக்கு சங்கு ஊதியதோடு, கூட்டணிக்குள் இருக்கும் குழப்பத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Exit mobile version