ஸ்டாலின் எப்போதும் முதலமைச்சராக முடியாது என கூறும் திமுகவினர்.!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் முதலமைச்சராக முடியாது என திமுகவினரே கூறி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவையில் கனிமொழி பிரச்சாரம் செய்வதற்காக 200 ரூபாய் கொடுத்து கூட்டம் கூட்டி வருவதாக விமர்சித்தார்.

கோவையில் மேம்பால கட்டுமான பணிகள் மெதுவாக நடைபெறுவதாக கனிமொழி கூறியது பற்றி பேசிய அமைச்சர், மேம்பால பணிகளுக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்பதை கூட தெரியாமல் பேசுவதாக விமர்சித்தார்.

Exit mobile version